ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்வது இலங்கையின் கையிலேயே தங்கியுள்ளது -ஐரோப்பிய ஒன்றியம்
Read Time:1 Minute, 17 Second
ஜீ.எஸ்.பி.வரிச்சலுகைத் திட்டத்தை மீண்டும் நீடிப்பது இலங்கையின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாற்றிய போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பேர்னாட் செவாஜ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக வடக்கில் பாதிப்புகளை எதிர்நோக்கிவரும் மக்களுக்கான உதவிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளின் முக்கிய மனித உரிமைப் பிரகடனங்களை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்யத்தவறியுள்ளதென குறிப்பிடப்படுகிறது.
Average Rating