விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் -பாதுகாப்புச் செயலாளர்

Read Time:1 Minute, 20 Second

விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா ஊடகத்திற்கு அளித்த விஷேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அரசியல் சாசனத் திருத்தங்களை கொண்டு வருவது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் காணப்படுவதனால் விரைவில் அரசியல் சாசனத் திருத்தம் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பி;ட்டுள்ளார். அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் கூடுதல் அதிகாரங்களை ஜனாதிபதி கோருவதாக வெளியிடப்படும் விமர்சனங்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களும் காணப்படுவதாகவும் மேலதிக அதிகாரங்கள் எதுவும் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்வது இலங்கையின் கையிலேயே தங்கியுள்ளது -ஐரோப்பிய ஒன்றியம்
Next post எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் சமர்பிக்கப்படும் -நிமல் சிறிபாலடி சில்வா