விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது மனம் திருந்தியுள்ள 100 பேருக்கு, டிரைவர் வேலை
Read Time:1 Minute, 14 Second
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது மனம் திருந்தியுள்ள 100 பேருக்கு, இலங்கை அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர் வேலை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வடக்கு மாகாண கவர்னர் சந்திரஸ்ரீ கூறியதாவது: விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த ஏராளமானோர், ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் மனம் திருந்தியுள்ளனர். இவர்களை படிப்படியாக, விடுதலை செய்யும் நடவடிக்கை துவங்கியுள்ளது.முன்னாள் விடுதலைப் புலிகளில் 100 பேருக்கு, டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, உரிமங்களும் வழங்கப்படும். அதற்கு பின், இவர்கள் அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழக பஸ்களில் பணியமர்த்தப்படுவர்.இவ்வாறு சந்திரஸ்ரீ கூறினார்.
Average Rating