மனோ கணேசனின் கட்சி பிரதிநிதியொருவருக்கு ஆசனம் வழங்கப்படுவதில்லை என்ற தீர்மானம் ஏற்புடையதல்ல -சஜித் பிரேமதாஸ

Read Time:1 Minute, 20 Second

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனங்களை ஒதுக்கும்போது மனோ கணேசனின் கட்சி பிரதிநிதியொருவருக்கு ஆசனம் வழங்கப்படுவதில்லை என எடுக்கப்பட்ட தீர்மானத்தை தான் எந்தவிதத்திலும் ஏற்றக் கொள்ளப் போவதில்லை எனவும் இதுகுறித்து தாம் கவலையடைவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் ஹம்பாந்தொட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மனோகணேசனுடன் நேற்றுமுன்தினம் இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றும் போதே பிரேமதாஸ இதனைக் கூறியுள்ளார். எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றாலும் அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள சஜித் பிரேமதாஸ ஏற்பட்டுள்ள அநீதிக்கு நீதியான தீர்வைப் பெற்றுக் கொடுக்க கூடிய தலையீடுகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அலங்கார விளக்குகளுக்கு தடை: சோயப் குடும்பத்தினர் எரிச்சல்
Next post ஜனாதிபதி பூட்டான் சென்று திரும்பியதும் மேலும் 5பேருக்கு அமைச்சு பதவி