இவ்வருடன் 20ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள்..
Read Time:1 Minute, 12 Second
மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்துக்கு அமைவாக 2010ம் ஆண்டுக்கு மேலும் 20ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் எல்.எஸ்.பலங்சூரிய தெரிவித்தார் கடந்த நான்குவருட காலத்தில் 91ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டதாகவும் இதற்காக 4127 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவீட்டுக்கு கூடியபட்ச நிதியுதவியாக 50ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் இதற்கு புறம்பாக 2010ம் ஆண்டு நகரத்தை கட்டியெழுப்புவோம் திட்டத்தின் கீழ் 1500 அடுக்குமாடி வீடுகளை அமைக்கவும் உத்தேசித்துள்ளதாக பலங்சூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating