ஐக்கிய தேசிய கட்சியில் இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம்..
Read Time:1 Minute, 5 Second
ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் கட்சியை மறுசீரமைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது ரவி கருணாநாயக்க சஜித் பிரேமதாஸ தயாசிறி ஜயசேகர மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோருக்கு சிரேஷ்ட பதவிகள் வழங்கப்படவுள்ளன. பிரதித் தலைவர் துணைத்தலைவர் தேசிய அமைப்பாளர் போன்ற பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இணைபிரதித்தலைவர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating