யாழில் ஆட்கடத்தல் சம்பவம் மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போ சந்திக்கு அருகில் 9ம் வகுப்பு பாடசாலை மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முயற்சித்த போது பொதுமக்கள் திரண்டு முறியடித்துள்ளனர் இச்சம்பவம் குறித்து தெரிய வருகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலை முடிவுற்று மாணவர்கள் வீடு செல்வதற்காக வந்துக் கொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்த இருவர் குறித்த மாணவியை பலவந்தமாக இழுத்து மோட்டார் சைகக்கிளில் ஏற்ற முற்பட்டனர் அப்போது அம்மாணவி கூக்குரல் இடவே கூடியிருந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர் அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு கடத்தல்காரர்களை வழிமறித்துள்ளனர் அவ்வேளையில் கடத்தல்காரர்கள் மாணவியை கீழே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் கடத்த முற்பட்ட மாணவி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Average Rating