நெதர்லாந்தில் விடுதலைப்புலி சந்தேகநபர்கள் கைது
Read Time:1 Minute, 4 Second
நெதர்லாந்தில் ஏழு விடுதலைப் புலி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதன் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது. வீடுகள் மற்றும் வர்த்த நிலையங்களில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அதேவேளைஇ கணனிகள் மற்றும் தொலைபேசிகள் உள்ளீட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் நெதர்லாந்தின் பல்வேறு தமிழ் அமைப்புக்களின் தலைவர் ஒருவரும் அடங்குவதாக நீதி அமைச்சு தெரிவித்தது.
Average Rating