பிரபாகரனின் தாய் மீண்டும் நாடு திரும்ப உள்ளார் – சிவாஜிலிங்கம்
Read Time:1 Minute, 15 Second
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப உள்ளதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாளை அடுத்த மாதமளவில் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மே மாதம் 10 அல்லது 12ம் திகதியளவில் தாம் மலேசியாவிற்கு சென்று பார்வதி அம்மாளை அழைத்து வர உள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பார்வதி அம்மாளுக்கு வீசா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆவரைத் தாம் பராமரிக்க உள்ளதாகவும், அதற்காக சிலர் நிதி உதவிகளை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating