ஆஸ்திரேலியா அருகில் புகலிடம் தேடி படகில் வந்த 41 பேர்.. கப்பற்படை விசாரணை

Read Time:1 Minute, 30 Second

ஆஸ்திரேலியா அருகில் புகலிடம் தேடி கடலில் நின்று கொண்டிருந்த 41 பேரை கொண்ட படகை, அந்நாட்டு கடற்படை மீட்டு விசாரணை நடத்தி வருகிறது.மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை அருகில் உள்ள ஆஷ்மோர் தீவு அருகில், 41 பேருடன் கூடிய படகை, ஆஸ்திரேலிய கடற்படை இடைமறித்து, விசாரணைக்காக அருகிலுள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. இதுகுறித்து, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பிராண்டோ ஓ கொன்னார் கூறுகையில்,’ அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. அனேகமாக அவர்கள் ஆப்ரிக்கர்களாகவோ அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கக் கூடும். புகலிடம் கோரும் அவர்களின் கோரிக்கையை இன்னும் ஆறு மாத காலத்துக்குப் பரிசீலிக்க முடியாது’ என்று தெரிவித்தார்.ஆஸ்திரேலிய அரசு, ஏப்., 9ம் தேதி முதல், ஆப்ரிக்கர்களுக்கு ஆறு மாதங்களும், இலங்கை நாட்டைச் சேர்ந்தோருக்கு மூன்று மாதங்களும் புகலிடம் கோரி வருவதைத் தடை செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸ் “புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய” செயற்பாடுகளில் இருந்து ஓராண்டுக்கு ரமணன் என்பவர் அவ்வமைப்பால் நீக்கம்!!
Next post பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து இந்திய மத்திய அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் ‐ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு