75 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது
75 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது செய்யப் பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் நோக்கில் குறித்த இலங்கையர்கள் படகு மூலம் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குறித்த படகு சேதமடைந்ததனால் அகதிகள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் 75 இலங்கை அகதிகளையும் மலேசியா கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர், மீட்டு தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இந்தப் படகில் ஆறு பெண்களும், எட்டு சிறுவர் சிறுமியரும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கடுமையாக நோய்வாய்ப்பட்ட இருவரும் குறித்த படகில் பயணித்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்காவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக பயணிகள் எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இலங்கைப் படகுப் பயணிகள் தற்போது தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
Average Rating