கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்தமாதம் இந்தியா விஜயம்
Read Time:1 Minute, 13 Second
இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமாராவின் அழைப்பை ஏற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்தறை சந்திரகாந்தன் அடுத்தமாதம் இந்திய செல்லவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார் இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்தின் பல்வேறு உயர்மட்ட பிரதிநிதிகளை முதலமைச்சர் சந்திக்கவிருப்பதாகவும் தற்போது கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் அண்மையில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இலங்கை வந்திருந்தவேளை சிவநேசத்துறை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்தித்து கலந்துரையாடியதும் குறிப்பிடதக்கது
Average Rating