பயங்கரவாதத்தின் அனைத்து பரிமாணங்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் – தெற்காசிய வலய நாட்டுத் தலைவர்கள்..!

Read Time:1 Minute, 37 Second

சகலவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளும் கண்டிக்கப்பட வேண்டியவை என தெற்காசிய பிராந்திய வலய நாடுகளின் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாதத்தின் அனைத்து பரிமாணங்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென தெற்காசிய வலய நாட்டுத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக பிராந்திய வலய நாடுகளின் பொருளாதாரம்இ சமாதானம் போன்றவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல்இ போதைப் பொருள் வர்த்தகம்இ ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் நாடு கடந்த திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களை தடுப்பதற்கு பிராந்திய வலய நாடுகள் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளின் போது பிராந்திய வலய நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவு மிகவும் அவசியாமனதென தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிழக்கு மாகாண முதலமைச்சர் அடுத்தமாதம் இந்தியா விஜயம்
Next post புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானியர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..!