பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உழைக்கும் வர்க்கத்தினர் அளித்த பங்களிப்பு அளப்பரியது – ஜனாதிபதி..!
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளுக்கு உழைக்கும் வர்க்கத்தினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய தடையாக காணப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உழைக்கும் வர்க்கத்தினர் அளித்த பங்களிப்பு அளப்பரியது என அவர் தெரிவித்துள்ளார். அமைதியான சூழ்நிலையில் மே தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதாகவும் விரைவில் ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றி அமைப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். சகல உழைப்பாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தாம் பூரிப்படைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உழைக்கும் மக்களுக்கு மேலும் பல்வேறு நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating