மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்பு என்ன? நீண்ட கால ஆய்வு துவக்கம்

Read Time:2 Minute, 56 Second

மொபைல் போன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை உறுதியாக அறிந்து கொள்வதற்காக, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட ஐந்து ஐரோப்பிய நாடுகளில், நீண்டகால ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.“தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார ஆராய்ச்சி திட்டம் ஒன்று துவங்கப் பட்டுள்ளது. இத்திட் டத்தை செயல்படுத்தி வரும், பேராசிரியர் லாவ்ரி சாலிஸ் கூறியதாவது:மொபைல் போன்களை அளவுக்கு அதிகமாக பயன் படுத்துவதால், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் என, ஒரு சிலர் கூறி வருகின்றனர். இருந்தாலும், இது தொடர்பான உறுதியான ஆய்வு முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.

இதுகுறித்து, இதுவரை வெளியான ஆய்வு முடிவுகள் அனைத்தும், மிக குறுகிய காலங்களில் மேற் கொள்ளப்பட்டவை.இது தொடர்பாக, குறைந்தது 20 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினால்தான், மொபைல் போன் பயன்படுத்துவதால், என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை தெளிவாக அறிய முடியும். இதற்காக பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளில், நீண்ட கால ஆய்வு நடத்தவுள்ளோம்.

இந்த நாடுகளில் மொபைல் போன் களை பயன்படுத்தும் 20 லட்சம் பேர், இந்த ஆய்வில் பங் கேற்கவுள்ளனர். 18லிருந்து 69 வயதுக்குட்பட்டவர்கள் மட் டுமே, இந்த ஆய்வில் பங் கேற்பர்.மொபைல் போன் பயன்பாடு குறித்தும், இதனால் அவர்களுக்கு எந்த வகையான மாற்றம் அல்லது பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து ‘ஆன் லைன்’வாயிலாக கேள்விகள் கேட்கப்படும். இதற்கு அவ்வப்போது அவர்கள் பதில் அளிப்பர். அவர்களுக்கு ஏற்படும் தலைவலி, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் குறித்தும் இதில் கேட்கப்படும். 20 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டும். இதன் முடிவில், மொபைல் போன்களை பயன்படுத்துவதால், எந்தவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை உறுதியாக அறிந்து கொள்ள முடியும். இவ்வாறு லாவ்ரி சாலிஸ் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவிஸில் புளொட்டின் மேதின ஊர்வலம்.. சிறப்பாக நடைபெற்றது!! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)
Next post திருப்பதியிலிருந்து திரும்பும் போது கார் கவிழ்ந்து விபத்து – மனோரமா காயம்