எதிர்வரும் காலங்களில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் -கல்வியமைச்சர் தெரிவிப்பு

Read Time:2 Minute, 2 Second

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள கல்வி முறைமையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப் படவுள்ளதாக புதிய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் எதிர்வரும் 12மாதகாலப்பகுதியில் முன்பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரையிலான முழு கல்வி முறைமையிலும் கட்டமைப்பு மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய கல்விக்கொள்கை ஒன்றை அமுல்படுத்துவதே தமது பிரதான இலக்கு எனவும் அதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்க்கும்போது ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகளுக்கு உரிய தீர்வுத்திட்டம் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார் பிள்ளைகள் பிறந்த நாள்முதல் எந்த பாடசாலையிலும் எவ்வாறு சேர்ப்பது என்ற சுமையுடன் பெற்றோர் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் தரம்ஆறு பயிலும் மாணவ மாணவியர் பிழையின்றி தமது தாய்மொழியில் சிங்களம் அல்லது தமிழில் ஓர்கட்டுரையை எழுதமுடியாத நிலைமையே தற்போதைய கல்வி முறையில் காணப்படுவாக அவர் தெரிவித்துள்ளார் நாட்டின் நீண்டகால நலனைக் கொண்டு நிலையான ஓர் கல்விக்கொள்கைப் பின்பற்றப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கு முஸ்லிம்கள் தாயகத்தில் மீள்குடியேறுவதையே இலக்காக கொண்டுள்ளனர் -றிஷாட் பதியுதீன்
Next post நெல்லியடியில் ஸ்ரூடியோ திறக்கவிருந்தவர் படுகொலை