அவசரகால சட்டத்தில் மாற்றம்..
Read Time:57 Second
தற்போதைய சூழலுக்கேற்ப அவசரகால சட்டத்தில் உள்ள சரத்துக்களில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம், ஆயுத விடயங்கள் மற்றும் காலத்துக்குத் தேவையான சில சரத்துக்களுடன் மட்டுமே இம்முறை அவரசரகால சட்டம் விவாதத்திற்கு உட்படுத்தவுள்ளது. நாளையும் நாளை மறுதினமும் இதன்மீதான விவாதம் இடம்பெற்று வாக்களிப்புக்கு விடப்படுமென அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Average Rating