விதவைகளின் வாழ்க்தைத் தரத்தை உயர்த்த இந்தியா உதவி
போரினால் மிகவும் கோரமாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும் எண்ணிக்கையிலான விதவைகள் இருப்பது புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 25கோடி ரூபாவை வழங்க முன்வந்துள்ளதாக மகளிர் வெளிவிவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய தூதர் அஷோக் காந்தாவை சந்தித்து பேசியபோதே அவர் இதனை தம்மிடம் தெரிவித்ததாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். தாம் பதவியேற்ற பின்னர் முதன் முதலில் சந்தித்த தூதர் இந்தியத் தூதர் தான் என்று தெரிவித்த ஹிஸ்புல்லா இதேபோன்று ஏனைய நாடுகள் சர்வதேச அமைப்புகளுடன் தாம் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வடக்கு கிழக்கில் வாழும் பெண்கள் சிறுவர்களின் வாழ்க்தைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய நிதியைப் பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Average Rating