புலி ஆதரவாளர்களின் நாடுகடந்த அரசை முறியடிக்க அரசு தயாராகிறது..
நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைப்பதற்குப் புலி ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முறியடிக்க வெளிவிவகார அமைச்சு தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இத்தகைய அரசொன்றை அமைப்பதற்கான தேர்தலொன்றை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை நாம் ஒரு தேர்தலாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு சர்வதேச ரீதியிலுள்ள தூதரகங்களுக்குத் தகவல்களைப் பெற்றுக்கொடுக்கவும் தேவைப்பட்டால் புலனாய்வுத்துறை அதிகாரிகளை அங்கு அனுப்பவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று தமது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாகக் கையேற்றபின் நடாத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
Average Rating