ஈரான் ஜனாதிபதி ஜி15 நாடுகளின் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்தவிடம் ஒப்படைக்கவுள்ளார்
ஜீ15 நாடுகளின் தலைமைப்பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் எதிர்வரும் 17ம் திகதி ஜீ15 நாடுகளின் 14வது மாநாடு இடம்பெறவுள்ளது தற்போது குறித்த அபை;பின் தலைமைப் பொறுப்பை வகித்துவரும் ஈரானிய ஜனாதிபதி முஹமட் அகமட்நிஜாடீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தலைமைப்பொறுப்பை ஒப்படைப்பார் என எதிர்ப்பார்க்கபடுகிறது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது பிரேஸிலின் ஜனாதிபதி லூலா டி சில்வா வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சர்வேஸ் ஆகியோரும் இந்த மாநாட்டில் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஜீ15 நாடுகள் அமைப்பு 1989ம் ஆண்டுமுதல் செயற்பட்டு வருவதாகவும் குறித்த அமைப்பில் ஆசிய பசுபிக் மற்றும் லத்தின் அமெரிக்காவை சேர்ந்த 18 நாடுகள் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating