ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்
சுகாதார அமைச்சின் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்ட மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து தெரியவருகையில் மாணவர்கள் தமது பல்கலைக்கழக கற்கை நெறியை 4வருடங்களிலிருந்து 3வருடங்களாக குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை கண்டிக்கும் வகையிலும் மீண்டும் கற்ககை நெறியை நான்கு வருடங்களாக்கும்படியும் கோரியே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அந்த ஆரப்பாட்டத்தை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்ததையிட்டு மாணவர்களுக்கம் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டபோது அது கைகலப்பில் முடிய இருதரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர் இதனைத் தொடர்ந்து நிலைமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கழகம் அடக்கும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
Average Rating