போலி அனுமதிப்பத்திரம் தயாரித்த TMVP பிரேசசபை உறுப்பினர் கைது
மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வழங்கிவந்த மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவர் வாகரை பால்சேனை பகுதியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் வாகரை நகரில் போலிசாரதி அனுமதிப்பத்திரத்துடன் கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்த பிரதேசசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார் சந்தேகநபரான பிரதேசசபை உறுப்பினர் ஒரு சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்க 15ஆயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடந்த காலத்தில் வாகரை பிரதேசத்தில் போலிஅடையாள அட்டைகளை வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டதாகவும் இந்த சம்பவத்துடன் சந்தேக நபருக்கு தொடர்புள்ளதாக என்பது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating