ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போய் இன்று 100நாட்கள்

Read Time:1 Minute, 30 Second

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போய் 100நாட்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் அவரை கண்டுபிடிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது ஊடக அடக்குமுறைக்கு எதிரான ஊடகவியலாளர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு எதிரில் நேற்று இடம்பெற்றுள்ளது ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போய் 100நாட்கள் கடந்துள்ள நிலையில் அரசாங்கம் இதுதொடர்பில் அசமந்தப்போக்கையே கடைபிடித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது மேலும் அரசாங்கம் முன்னெடுத்துவரும் அவதூறு ரீதியிலான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மறைமுகமாக ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறையை கண்டு பிடிப்பதற்காகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்புவாழ்க்கை வழமைக்கு திரும்ப வழிசெய்ய வேண்டும் -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேண்டுகோள்
Next post ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் டெய்லிமிரர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்