இன்றுகாலை முதல் பொன்சேகா உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்

Read Time:1 Minute, 37 Second

ஜெனரல் பொன்சேகா இன்றுகாலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என ஜனநாயக தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறும் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதிக்காமையை ஆட்சேபித்தே ஜெனரல் பொன்சேகா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் ஜெனரல் பொன்சேகாவுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க சந்தர்ப்பம் அளிக்குமாறும் சபாநாயகரிடம் நேற்று கோரியிருந்தார். இதற்கிடையில் ஜெனரல் பொன்சேகா மீதான முதலாவது மற்றும் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் இன்று இடம்பெற்றது இந்நிலையில் முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை இடம்பெற்ற போது மேன்முறையீட்டு நீதிமன்ற தடையுத்தரவின் அடிப்படையில் விசாரணை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி பிற்போடப்பட்டுள்ளது. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக சரத் பொன்சேகா இந்த விசாரணையின் போது சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் டெய்லிமிரர் ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார்
Next post ஈபிடிபியினரால் கொலை அச்சுறுத்தல்.. சாவகச்சேரி நீதவானுக்கு இராணுவ பாதுகாப்பு