தடுப்புகாவலிலுள்ள இளைஞர்களின் எண்ணிக்கையை வெளியிடுக .அநுரகுமார திஸாநாயக்க
இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்பாக இன்னமும் குழப்பமான பல்வேறுபட்ட எண்ணிக்கைகளே தெரிவிக்கப்பட்டு வருகின்றன ஒவ்வொரு அறிக்கையும் வேறுபட்ட எண்ணிக்கைகளை தெரிவித்து வரும் நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான அறிக்கையை அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார் இதுகுறித்து வெளியிடப்படும் ஒரு அறிக்கையில் 15000பேர் உள்ளனர் என்றும் வேறு அறிக்கைகள் 11000பேர், 8000 பேரென்றும் கூறுகின்றனர் தமது பிள்ளைகள் உயிருடன் இருக்கின்றனரா எங்கே வாழ்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் பெற்றோர்களுக்கு உண்டு ஆனால் அவர்கள் தமது பிள்ளைகளின் புகைப்படங்களுடன் முகாம் முகாமாக அலைந்து கொண்டு அழுது புலம்பி திருகின்றனர் எனவும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி கூறியுள்ளார். இதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் 250பேர் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் ஆனால் அவர்கள் எந்தமுகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து எதுவித தகவலும் இல்லை என சுட்டிக் காட்டியுள்ளார்
Average Rating