கொழும்பு நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக தொகுதி.. 2ஆயிரம் கொடுப்பனவு வழங்கவும் ஜனாதிபதி உத்தரவு
இரண்டு வாரக்கலத்திற்கு போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை கொழும்பு நடைபாதை வியாபாரிகளுக்காக நிர்மாணிக்குமாறும் அதுவரை அவர்களுக்கு கொடுப்பனவு 2ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று முன்தினம் பிற்பகல் புறக்கோட்டை சுயவேலையாளர் சங்கபிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்து பேசினார் புறக்கோட்டையில் நடைபாதை வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டதையடுத்து ஏற்பட்ட நிலை தொடர்பாக பேசுவதற்கு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நடைபாதையில் செல்வோருக்கு அசௌகரியம் ஏற்படாத வகையிலும் நகரத்தில் கவர்ச்சிக்கும் பங்கம் ஏற்படாத வகையிலும் சிறிய வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை நடத்திச் செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் முறையான திட்டமொன்றை துரிதகதியில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
Average Rating