இலங்கை அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது -பஷில் ராஜபக்ஷ

Read Time:2 Minute, 19 Second

இலங்கை கடந்த 60வருடங்களாக அபிவிருத்தி குன்றிய நாடாகவே கருதப்படுகிறது இந்த நிலையை மாற்றவேண்டும் வறுமை ஒழிப்பு கிராமிய அபிவிருத்தி பிரதேச அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிபோன்ற பல இலக்குகளை வெற்றிக்கொளவதே எமது அமைச்சுக்குள்ள முக்கிய பொறுப்புகளாகும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் மத்திய வங்கிக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் மத்திய வங்கிக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வங்கி அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றும் போது தெரிவிக்கையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை முன்னெற்றுவதே எமது இலக்காகும் இந்த இலக்கை அடைவதற்கு மத்திய வங்கி முழு ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரிய ஆணையை வழங்கினர் அவர்கள் வழங்கிய பெரும்பான்மை அதிகாரத்தை போன்றே அவர்களின் எதிர்பார்ப்பும் மிகப்பெரியதாகும் மக்களின் பாரிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு நாம் கூடுதல் அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும் எமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மத்திய வங்கி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் சரியான வழிகாட்டல்களை மத்திய வங்கி வழங்கவேண்டுமென கேட்டுக் கொண்டார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய வர்த்தக தொகுதி.. 2ஆயிரம் கொடுப்பனவு வழங்கவும் ஜனாதிபதி உத்தரவு
Next post யாழ். சிறையில் தமிழ் அரசியல் கைதிகள்மீது கடும் தாக்குதல்