சுசில் கிந்தெல்பிட்டியவிற்கு எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில்..
Read Time:1 Minute, 18 Second
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் வேட்பாளரும், ஊடகவியலாளருமான சுசில் கிந்தெல்பிட்டியவை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் குமாரி அபயரட்ன இன்று உத்தரவிட்டுள்ளார். இவர் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என மிரிஹான பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, சுசில் கிந்தெல்பிட்டியவை எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னராக சுசில் கிந்தெல்பிட்டியவின் வாகனத்தில் ஆயுதம் இருந்ததாகவும், அவர் தன்னை அச்சுறுத்தியதாகவும் பெண்மணி ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, சுசில் கிந்தெல்பிட்டிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
Average Rating