யாழ் நகர நுழைவாயில்களில் மீண்டும் சோதனை

Read Time:1 Minute, 19 Second

யாழ் நகர நுழைவாயில்களில் மீண்டும் சோதனை நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்த பின் நிலவிய சுமூகமான நிலையைளடுத்து யாழ்ப்பாண நுழைவாயில்களில் இருந்த சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டிருந்தன. தற்போது அங்கு இடம்பெற்றுவரும் கடத்தல், கப்பம்கோரல் போன்ற செயல்கள் காரணமாக படையினர் மீண்டும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். யாழ். நகர நுழைவாயில்களான தட்டாதெருச் சந்தி, ஓட்டுமடம் சந்தி, இலுப்பையடிச் சந்தி போன்ற பகுதிகளிலேயே மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றைவிட, யாழ். நகரின் மத்தியில், ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு, வீதிப் போக்குவரத்து ஒழுங்கமைக்கப்பட்டும், நகரின் சீரான நிலைமை பேணப்பட்டும் வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை அதிகாரிகளை சந்திக்க விரும்பாத ஆஸி செல்ல முனைந்து மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்..
Next post யுத்தகுற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு தயார் -ஜெனரல் பொன்சேகா தெரிவிப்பு