யுத்தகுற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளுக்கு தயார் -ஜெனரல் பொன்சேகா தெரிவிப்பு
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது யுத்தகுற்றம் இடம்பெற்றதா என உலகநாடுகள் விசாரணை செய்யுமானால் அதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோது தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் தனக்கு தெரிந்த விடயங்களை தெரிவிப்பதில் தான் பின்நிற்பதில்லை எனக் குறிப்பிடும் அவர் விசாரணைகளில் தனக்கு தெரிந்த சகல விடயங்களையும் விசாரிப்போரிடம் தெரிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டவுள்ளது யுத்தம் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ விரைவில் ஆணைக்குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இறுதிக்கட்ட சர்வதேச நியமனங்கள் பின்பற்றப்பட்டனவா அல்லது ஏதேனும் உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் குழுக்கள் அடையாளம் காணப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Average Rating