மட்டக்களப்பில் ஆட்கடத்தல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
Read Time:1 Minute, 11 Second
மட்டக்களப்பில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன முழுமையான விசாரணைகளின் பின்னரே உண்மையான அறிக்கைகளை வெளியிடுவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர் மட்டக்களப்பில் கடந்த வாரம் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்களினால் மக்கள் இன்னமும் பயத்தில் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்திலும் சாதாரணதரம் கற்கும் மாணவர் ஒருவர் கடத்தப்பட்டு பின்னர் தப்பி வந்தசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார் மட்டக்களப்பு நகரில் தொடரும் கடத்தல் சம்பவங்களால் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புகளையும் மாணவர்கள் பயத்தினால் புறக்கணித்து வருவதாகவும் மேலும் தெரியவருகிறது
Average Rating