தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் -ஜெனரல் பொன்சேகா
யுத்தகாலப் பகுதியில் இராணுவத்தினர் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக குற்றம் செய்திருந்தால் அவை வெளிக்கொணரப்படும் தமிழ் இளைஞர்களுக்கு அநீதி இழைத்தவர்கள் எவராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயக தேசிய கூட்டணியின் விஷேட செய்தியாளர் மாநாடு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போதே போர்குற்றம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போது ஜெனரல் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் முன்னாள் இராணுவத்தளபதி என்ற வகையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் எந்தவொரு சம்பவத்தையும் மறைக்க விரும்பவில்லை இச்சம்பவங்கள் தொடர்பில் எந்த சந்தர்ப்பத்தில் எவர் கேட்டாலும் அவை குறித்து வெளிப்படையாக கூற நான் தயார் என்றும் தெரிவித்துள்ளார்
Average Rating