சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் கைது
கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் மற்றும் நேபாளியர்கள் அடங்கிய குழுவொன்றை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் நேற்று மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது மேற்படி 28 இந்தியர்களும் 3நேபாளியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டு;ள்ளனர் கொழும்பு பெட்டாவில் உள்ள லொட்ஜ் ஒன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் நடத்திய விசாரணைகளில் இவர்கள் தொழில் வாய்ப்பை பெறுவதற்காக டுபாய் செல்லவிருந்தமையும் தெரிய வந்ததாக குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 21க்கும் 35க்கும் இடைபட்ட வயதினர் ஆவர் இவர்களை கொழும்புக்கு கூட்டிவந்து பின்னர் டுபாய் அனுப்புவதாக ஒரு முகவர் உறுதி கொடுத்திருந்தாராம் இதற்காக அவர்கள் 150000 இந்திய ரூபாய்களை அந்த முகவருக்கு செலுத்தியதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating