யாழில் மனைவியின் தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் 2பேர் கைது
Read Time:1 Minute, 22 Second
தனது மனைவியின் தங்கையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் தொடர்புடைய 2பேரரை பொலிஸார் கைது செய்துள்ளனர் புன்னாலைகட்டுவன் பகுதியை சேர்ந்த இவ்இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் எஸ்.அரியரட்னம் உத்தரவிட்டுள்ளார். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போதே அவர் இந்த உத்தரவினை பிற்பபித்துள்ளார். மன்னாரில் கல்வி பயின்றுக் கொண்டிருந்த புன்னாலைகட்டுவனைச் சேர்ந்த மாணவி ஒருவரை அவரது சகோதரியின் கணவரான சந்தேகநபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார் அத்தோடு இவரது குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மற்றைய குடும்பஸ்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating