புலிகள் தொடர்பென தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் -மனோ கணேசன்

Read Time:1 Minute, 30 Second

புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தொடர்பில் ஜனாதிபதி தலையீடு செய்து தீர்வினை வழங்க வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்குத் தொடரப்படாத நிலையில் பல தமிழ் இளைஞர் யுவதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான 500முதல் 600 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மாஅதிபரை ஆதாரம்காட்டி மனோகணேசன் தெரிவித்துள்ளார். குடும்ப் பொறுப்பை சுமந்த இளைஞர்களே அதிகளவில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்திற்கு வழங்கப்பட்டதனைப் போன்று குறித்த இளைஞர்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்குமாறு அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊடகவியலாளர் சொத்து விபரம் காட்ட வேண்டிய தேவையில்லை -ஊடக அமைச்சர்
Next post துருக்கி மலைச் சிகரத்தில் இருப்பது நோவாவின் கப்பலா?