தனித்தனியே பேசுவதைவிட கூட்டுச்சேர்ந்து பேசுவத நல்லது -பிள்ளையான்

Read Time:2 Minute, 1 Second

தமிழ்மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற உண்மையான நோக்கத்துடன் அனைவரும் சேர்ந்து செய்றபட வேண்டுமென்பது பாராட்டத்தக்கது, வரவேற்கிறோம். இது ஒரு நல்ல விடயம். தனித்தனியே பேசிக்கொண்டிருக்காமல் இப்படிக் கூட்டுச் சேர்ந்து பேசுவதற்கு நாம் தயார். ஆனால், நடக்க முடியாத விடயங்களைப் பேசுவதால் பயனில்லை என்பதனையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒரு தொடக்கப் புள்ளியாகக் கொண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் தவறில்லை. ஏனெனில் இதனைத் தாண்டி எதனையும் செய்ய முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என த.ம.வி.புலிகள் தலைவர் சிவநேசன் சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்

ஆனால், இவற்றினையெல்லாம் பழுத்த தமிழ் அரசியல் தலைமைகள் ஏற்றுக்கொள்வார்கள் என்று என்னால் கூறமுடியாதுள்ளது. பழுத்த அரசியல்வாதிகள் மற்றவர்களை வெட்டி விட்டுத் தாங்கள் மட்டும் இருக்கவேண்டுமென்ற நினைப்புக் கொண்டவர்கள்தானே? யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு வளர்ந்து வரும் ஒரு தமிழ் கட்சி என்ற வகையில் எமது கட்சி இதனை ஏற்றுக்கொள்கிறது.

இவ்வாறான இணக்கப்பாட்டு அரசியலுக்கு யார் தலைமை தாங்க வேண்டுமென்பதிலும் எந்தப் பிரச்சினைகளும் இல்லை. கருத்துகள்தான் இங்கு முக்கியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “தனித்தனியே பேசுவதைவிட கூட்டுச்சேர்ந்து பேசுவத நல்லது -பிள்ளையான்

  1. கருணா என்ற இன துரோகியின் செயல்களாலும், சில நாடுகள் ஆயுதம் கொடுத்து உதவியதாலும்தான் சிங்கள் படைகளால் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க முடிந்தது. இதையெல்லாம் மூடி மறைக்கும் இலங்கை அரசாங்கம், போர் வெற்றியை மிகப்பிரமாண்ட மாக கொண்டாடி தனக்கு பெருமை சேர்த்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 
    விடுதலைப்புலிகளின் நினைவிடங்கள் அழிப்பதால் அவர்கள் வீரம் மறையபோவது இல்லை….
    இலங்கை தமிழ் இனம் அழிவிற்கு இந்திய அரசு பெரும் பங்கு வகிக்கிறது காலத்தால் அழியாப்பலி இந்திய அரசுக்கு ஏற்ப்பட்டு விட்டது காங்கிரசு அரசாங்கம் இல்லாமல் பாரதிய அரசாங்கம் என்றல் சிங்கள ராணுவத்துக்கு போர் தளவாடம் போர் பயிற்சி கொடுத்திருக்காது தமிழன் அழிந்து இருக்க மாட்டான்.தமிழ் நாட்டு தமிழன் கண்டும் காணமல் இருந்தது ஒரு காரணம் …தமிழன் அழிவுக்கு காரணமான எவனையும் காலம் மன்னிக்காது. இது தொடர்ந்தால் இலங்கையில் மீண்டும் போர் தொடங்கும் இது நிச்சயம்..
    வரலாற்றில் எத்தனையோ மன்னர்களையும் தலைவர்களையும் வீரர்களையும் பற்றிப் பெருமையாகப் படிக்கின்றோம். அவர்கள் போரில் கொல்லப்பட்டிருந்தாலும் தன்மதிப்பைக் காக்கத் தற்கொலை புரிந்து கொண்டிருநதாலும் அவர்களை இழிவாக எண்ணுவதில்லை. வீர மரணங்களையும் தாய்நாடு காத்து மடிந்த நிகழ்வுகளையும் வணக்கத்துடனே நினைவு கூர்கின்றோம். போரில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் நினைவிடங்கள் அழித்தாலும் அவர்கள் புதைக்கப்படவில்லை ! விதைக்கபட்டுள்ளர்கள் எனவே சிங்கள வெறியர்கள் அழித்தாலும் அதில் இருந்து தமிழ்த்தேசிய காற்றே வரும் , தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்கிறார் என்ற நம்பிக்கை இருகிறது! மீண்டும் போரை துடன்குவர் என்று இருந்தாலும் அவர் வீரமும் நாட்டு மக்கள் விடுதலைக்காக அவர் பாடுபட்ட திறமும் ஈராயிரம் ஆண்டுகளில் தமிழ்மானம் காக்க வாராது வந்த மாமணியாய் விளங்கும் செம்மாப்பும் என்றென்றும் நினைவில் கொண்டு போற்றத்தக்கனவே! கொத்துக் குண்டுகளைப்பயன்படுத்தித் தம் நாட்டு மக்கள் எனச் சொல்லிக் கொண்டே வஞ்சக முறையில் இனப் படுகொலை செய்த சிங்கள அரசு வெற்றி விழா கொண்டாடும் வேலையேல் !விரைவில் தமிழ் ஈழ வெற்றி விழா கொண்டாடும் காலம் வரும்,தமிழ் ஈழம் வெல்க! வாழ்க புலிகல் ! வாழ்க பிரபாகரன்…

     

Leave a Reply

Previous post சிங்கத்தை ஒரு வாரம் முன்கூட்டியே ‘விடும்’ சன் பிக்சர்ஸ்!
Next post வவுனியா முகாம்களிலிருந்து சுமார் 17,000பேர் மீள்குடியேற்றம்..