புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே முதல் நடவடிக்கையென வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

Read Time:1 Minute, 20 Second

புலிகளின் சர்வதேச பிரச்சாரங்களை முறியடிப்பதே தமது அமைச்சின் முதற்கட்ட நடவடிக்கையென்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களை விடவும் புலிகளின் சர்வதேச பிரச்சார வலையமைப்பு வலுப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த பௌத்த தேரர்களை சந்தித்தபின் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தீவிரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் சர்வதேச பிரச்சார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் இராஜதந்திரிகள் மற்றும் உயரதிகாரிகளுக்கு புலிகளின் வலையமைப்பை முறியடிப்பது குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா முகாம்களிலிருந்து சுமார் 17,000பேர் மீள்குடியேற்றம்..
Next post Nithiyanantha video