சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்பட்டமைக்கு படையினரின் பயிற்சி பாதிப்பே காரணம்..
கொம்பனித்தெரு மலேவீதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டடங்களை அகற்றியமை தொடர்பில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெளிவுபடுத்தியுள்ளது. மலே வீதியில் உள்ள பாதுகாப்பு பயிற்சி நிலையத்திற்கு அண்மையில் இருந்தவெற்றுக்காணியில் அத்துமீறி கட்டடங்களை கட்டி குடியிருந்தமை சட்டவிரோதமானது என மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவே இந்த கட்டிடங்களை நேற்று அகற்றியமை சட்டரீதியானதும் மனிதாபிமான அடிப்படையில் நியாயமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குடியிருந்த போதும் அவர்களுக்கு மாற்று இருப்பிடங்களையும் நட்டஈட்டினையும் வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பயிற்சி நிலையத்தில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த இந்தகாணி அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating