முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆயுதங்களுடன் கைது
Read Time:1 Minute, 8 Second
சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் முன்னாள் பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸின் சாரதி ஆனமடுவை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகலிருந்து ஆனமடுவை நோக்கி மேற்படி சாரதி பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தை இடைமறித்து சோதனையிட்ட பொலிஸார், அதற்குள்லிருந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் பயன்படுத்தப்படும் எம்-.16ரக துப்பாக்கி, 30 ரவைக்கள் உள்ளடக்கப்பட்ட இரு மகசீன்கள் போன்றவற்றை மீட்டுள்ளனர். அத்துடன் குறித்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த மற்றொருவரையும் கைது செய்த ஆனமடுவை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating