கடலில் குளிக்கச்சென்ற மலையக மாணவர்களைக் காணவில்லை.. தேடும் பணிகள் தீவிரம்

Read Time:1 Minute, 12 Second

வத்தளை பிரீத்திபுர கடலில் குளிக்கச் சென்ற போது கடலலையால் அள்ளுண்டு சென்ற இரண்டு மாணவர்களைத் தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினர் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர் வத்தளைக்கு உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற பொகவந்தலாவை சீனாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ஹொலிஹொசரி பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்தோனிராஜ் நிரோஷன் (வயது17) இராமலிங்கம் சபேஷ்குமார் (வயது17) ஆகிய இரண்டு மாணவர்களே இவ்வாறு கடலலையில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமைத் தொடர்ந்து கடற்படையினரின் உதவியுடன் இந்த மாணவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதுவரை 100மோட்டார் சைக்கிள்களே அடையாளம் காணப்பட்டுள்ளது
Next post இலங்கை வெற்றி – இந்திய அணியின் அரை இறுதி கனவு தகர்ந்தது