இலங்கை வெற்றி – இந்திய அணியின் அரை இறுதி கனவு தகர்ந்தது
20 டுவெண்டி ஆட்டத்தில் இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கான பரபரப்பான போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணியின் அரைஇறுதிக் கனவும் தகர்ந்தது. முதலில் துடுப்பெடுதாடிய இந்திய அணி டாஸ் வென்ற போது ரசிகர்களுக்கு சற்று நம்பிக்கை இருந்தது. இந்திய அணி ஸ்கோர் 163 ரன்கள் 5விக்கெட் இழப்பிற்கு எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி வீரர்கள் துடுப்பாட்டத்தில் பின்னி எடுத்து விட்டனர். சாமர கப்புகெதர 3 சிக்ஸர்கள் அடங்கலாக 37 ரன் எடுத்து இலங்கை அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார்
சங்ககார, மத்திவ்ஸ் தலா 46 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர். இந்திய அணி முன்னைய 20டுவெண்டியில் விளையாடியதை போன்றே இம்முறையும் மோசமாக விளையாடி சூப்பர் 8 இல் ஒரு போட்டியிலேனும் வெல்லாதது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் இந்திய அணிக்கு இருந்த அரை இறுதி வாய்ப்பும் பறிபோனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
Average Rating