வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பார்வதி அம்மாள்- உடல் நிலை மோசமடைகிறது

Read Time:2 Minute, 24 Second

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மிகவும் மோசமான உடல்நிலையில் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுய நினைவை இழந்த நிலையில் இருப்ப்தாக தகவல்கள் கூறுகின்றன. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் பார்வதி அம்மாள். அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து அவசர சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் இடையில் அரசியல் விளையாடியது. சென்னைக்கு வந்த சேர்ந்த பார்வதி அம்மாளை, விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது மத்திய அரசு.

இதையடுத்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசோ நிபந்தனைகள் பலவற்றை விதித்து அதற்குட்பட்டு பார்வதி அம்மாள் சென்னையில் சிகிச்சை பெறலாம் என அறிவித்தது. ஆனால் அதை பார்வதி அம்மாள் குடும்பத்தினர் நிராகரித்து விட்டனர்.

மலேசியாவிலிருந்து அவரை இலங்கைக்கு கொண்டு சென்றனர். அங்கு கொழும்பில் ஒரு லாட்ஜில் வைத்து கவனித்து வந்தார் உறவினரான சிவாஜிலிங்கம். பின்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்பட்ட பார்வதி அம்மாள் தற்போது வல்வெட்டித்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சுய நினைவை பார்வதி அம்மாள் இழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் பார்வதி அம்மாளின் உடல் நிலை குறித்து தெளிவான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பு, சந்திவெளிப் பகுதியில் இளைஞன் ஒருவர் வெள்ளை வேனில் வந்தோரால் கடத்தல்..
Next post புலிகளுக்கு நிதி.. சிறை தண்டனை பெறும் முதல் கனடிய தமிழர்!