சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம்
Read Time:1 Minute, 15 Second
இலங்கை சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விஷேட குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய இக்குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார் இலங்கை சமூர்த்தி அதிகாரசபையின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் சுற்றுலா ஒன்றில் நேற்று கலந்துக் கொண்ட போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார். இக்குழுவினரின் சிபாரிசு அறிக்கை கிடைத்ததும் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடு;க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்
Average Rating