மன்னார் வங்காலையில் கிளமோர்தாக்குதல் மூன்று இராணுவம் பலி
Read Time:1 Minute, 2 Second
மன்னார் வங்காலையில இன்று காலை 8.30 மணியளவில் புலிகள் மேற்கொண்ட கிளமோர்தாக்குதலில் 3 படையினர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் படை அதிகாரி தரநிலையில் உள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை புலிகள் இன்று காலை 7 மணியளவில் மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் பிரதேசத்திலிருந்து படையினர் மீது ‘செல”; தாக்குதல் நடத்தியதாகவும் படையினர் கிரானிலிருந்து பதில் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த மோதல் சிறிது நேரம் நீடித்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சேத விபரங்கள் தெரியவில்லை.