யாழ்ப்பாண மாநகர சபை மேயரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு
Read Time:1 Minute, 25 Second
நீதித்துறைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாழ்ப்பாணம் மாநகர சபையி னால் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட விளம் பரங்கள் தொடர்பாக யாழ்.மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் வாக்கு மூலம் பெற்று எதிர்வரும் 17 ஆம் திகதி நீதி மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்.மாவட்ட நீதிவான் ஆனந்தராஜா யாழ்.பொலிஸாருக்கு உத்தரவிட்டார். யாழ்.மாநகர சபையின் பிரதி மேயர் றீகன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பத்திரிகைகளில் யாழ்.மாநகர சபையினால் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டது.அது குறித்து அதிருப்தி வெளியிட்ட நீதிமன்றம், மாற்று விளம்பரம் ஒன்றைப் பிரசுரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதிலும் திருப்தியடையாத நிலையில் மேயரின் வாக்கு மூலத்தைப் பெற்று எதிர்வரும் 17 ஆம் திகதி நீதிமன்றில் சமர்பிக்குமாறு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டார்
Average Rating