கனேடியத் தூதுவரின் மட்டக்களப்பு விஜயமும் சந்திப்புகளும்..
Read Time:1 Minute, 2 Second
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் இன்றுமாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கனேடிய தூதுவர் இறுசிலீவி மட்டக்களப்பு மாநகர சபைக்கு விஜயம் செய்து மாநகரமேயர் திருமதி சிவகீதா பிரபாகரனை அவரது பணிமனையில் வைத்து சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது மட்டக்களப்பு மாநகரின் அபிவிருத்தி, தற்போதைய நிலவரம், மீள்குடியேற்ற பிரதேசங்களின் நிலைமைகள், குறித்து மாநகர மேயருடன் கலந்துரையாடியதாக மாவட்ட அரசாங்க அதிபர் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வின்போது அதிகாரிகள் உறுப்பினர்கள் உட்பட பலர்கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating