உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு விசாரணையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை..!

Read Time:2 Minute, 4 Second

மனித உரிமைமீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணைகளை பார்வையிட பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது எதிர்வரும் மாதங்களில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் இந்த விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் கமரா மூலம் ஒளிப்பதிவு செய்யப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார் அரசியல்வாதிகள் படையதிகாரிகள் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரிடம் குறித்த குழு விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த உடனபடிக்கை வீழ்ச்சியடைவதற்கான காரணங்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் முதலில் விசாரணை நடத்தப்படவுள்ளது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவினால் குறிப்பிட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகளுடன் தொடர்புடைள நபர்களிடம் விசாரணை நடத்தப்படும் என சீ.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார் விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதிக்க முன்னதாக நிறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தென்ஆபிரிக்கா மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்கள் நடத்திய விசாரணைகளின் பாணியிலேயே இந்த விசாரணையும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியாவில் சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை அடையாளம் காண உதவுமாறு வேண்டுகோள்..!
Next post வெனிஸ் பட விழாவில் மணிரத்னத்துக்கு கவுரவம்