20வது தியாகிகள் தினம் தாய்லாந்தில் அனுஷ்டிக்கப்பட்டது..!

Read Time:1 Minute, 10 Second

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் 20வது தியாகிகள் தின நிகழ்வுகள் நேற்றையதினம் தாய்லாந்து பாங்கோக்கின் லும்பினி நகரில் நடைபெற்றுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்களின் விளக்கேற்றல் நிகழ்வுடன் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் தோழர் பத்மநாபா அவர்களின் உருவப்படத்திற்கு மலராஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மௌனஅஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது. 19.06.1990ல் சென்னையில் வைத்து புலிகளால் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் தோழர் கே.பத்மநாபா அவர்கள் உள்ளிட்ட தோழர்களின் நினைவாக ஆண்டு தோறும் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய பொலிவுட் நடிகர் சல்மன்கான் நாளைமாலை இலங்கைக்கு விஜயம்..!
Next post கனடா சென்றடைந்த 76இலங்கையர்களில் 25பேர் புலிகள் என தகவல்..!