கனடா சென்றடைந்த 76இலங்கையர்களில் 25பேர் புலிகள் என தகவல்..!

Read Time:1 Minute, 24 Second

கடந்தவருடம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா தளத்தை கப்பலில் சென்றடைந்த இலங்கையர்கள் 76பேரில் 25பேர் புலி உறுப்பினர்கள் என்று கனடாவின் வன்கூவர் சண் ஊடகம் தெரிவித்துள்ளது. இவர்கள் புலிகள் அமைப்பில் புலனாய்வு மற்றும் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் குறித்த அகதிகள் தொடர்பில் பிரசன்னமான சட்டத்தரணி டக்ளஸ் கெரோன் இந்த 25பேரும் புலி உறுப்பினர்களாயின் இவ்வருட ஆரம்பத்தில் இவர்களை விடுதலை செய்வதற்கு கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வாறு இணங்கினார்கள் என்று கேள்வியெழுப்பியுள்ளார். இதேவேளை இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கனடாவின் எல்லையோர பாதுகாப்பு அதிகாரிகள் கருத்துரைக்கையில், வன்கூவர் சண் செய்தித்தாளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றதென குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த 76பேரும் கனடாவில் அடைக்கலம் கோருவதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20வது தியாகிகள் தினம் தாய்லாந்தில் அனுஷ்டிக்கப்பட்டது..!
Next post குமரன் பத்மநாதன் வவுனியா பிரதேசத்திற்கு விஜயம்..!