தாய்லாந்தில் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு..!
Read Time:50 Second
தாய்லாந்து குருந்தன்புரி என்னுமிடத்தில் அமைந்துள்ள குருந்தன் மென்சன் வளாகத்தில் புளொட்டின் 21வது வீரமக்கள் தினம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00மணியளவில் நினைவுகூரப்பட்டது. மலராஞ்சலி மற்றும் மௌனஅஞ்சலி என்பன இதன்போது இடம்பெற்றன. திரு.ராம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வுகளில் புளொட் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஈ.பி.ஆர்.எல்.எவ் (சுரேஷ்), ஈ.பி.ஆர்.எல்.எவ் (நாபா), ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Average Rating